Skip to main content

நேற்று பசு, இன்று மான், நாளை ? – வேட்டைக்கான வெடியால் உயிர் துடிக்கும் விலங்குகள்

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

 


வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே காட்டு பன்றிக்காக மாங்கொட்டைக்குள் வைத்த நாட்டு வெடியை மாங்கொட்டை என நினைத்து கடித்ததால் பசுமாட்டின் வாய் கிழிந்து ரத்தம் சொட்டியது. அதற்கு ராணிப்பேட்டை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதோடு, நாட்டு வெடியை வைத்த ஒரு இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது ராணிப்பேட்டை காவல்துறை. இந்த விவகாரம் மே 18ந்தேதி நடைபெற்றது.


மே 19ந்தேதி காலை அதே வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த  ஜமீன் பகுதியில் காப்புக்காட்டுக்குள் இருந்து வந்த புள்ளி மான் ஒன்று, விலங்குகளை வேட்டையாடவும், காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களை காத்துக்கொள்ள வைக்கப்பட்ட நாட்டு வெடியை கடித்து மானின் வாய் கிழிந்தது.

 

m


இதனை காலை 11 மணியளவில் பார்த்த அப்பகுதி மக்கள் இதுப்பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மானை பிடித்துச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நாட்டு வெடியை வைத்தது யார் என விசாரணை நடத்திவருகின்றனர்.


விவசாய பயிர்களை அழிக்கிறது, அதனை காக்கிறோம் என்கிற பெயரில் காப்பு காடுகள், மலையாடிவாரத்தில் உள்ள நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகள், காட்டு விலங்குகளிடம்மிருந்து பயிர்களை காக்கிறோம் என்கிற பெயரில் முறையற்ற வகையில் மின்சார வேலி அமைப்பது, சட்டத்துக்கு புறம்பாக நாட்டு வெடி தயாரித்து வரப்புகளில் வைப்பது என செயல்பட்டு விலங்குகளை கொல்கின்றனர்.


அதேபோல், வேட்டைக்காரர்களும் இதே நாட்டு வெடியை பயன்படுத்துக்கின்றனர். இதுயெல்லாம் தெரிந்தும் வனத்துறையோ, காவல்துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. புகார் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என புறம்தள்ளுகின்றனர். முன்கூட்டியே தடுத்து நிறுத்துவோம், நடவடிக்கை எடுப்போம் என்பதில்லை. விலங்குகள் தானே என அலட்சியம் காட்டுவதற்கு முக்கிய காரணம் லஞ்சமே என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்களுடைய கனவு பலிக்காது; உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்' - இபிஎஸ் பேச்சு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'Your dream will not come true; We will not be afraid of rolling intimidation'-EPS speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு இன்றைக்கு  அவருக்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுத்து தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய அனுப்பி இருக்கிறார்கள். இது என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா? தமிழ்நாடு.

ஏன் இங்கு இருப்பவர்களில் யாரும் வரக்கூடாதா? மேடையில் இருப்பவர்கள் வரக்கூடாதா? இது ஜனநாயக நாடு மு.க.ஸ்டாலின் அவர்களே. உங்களுடைய கனவு பலிக்காது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். வாரிசு அரசியல் இங்கு கிடையாது. இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் மக்கள். போகும் பக்கம் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை சாடி பேசுகிறார். என்னைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார். அரசியலுக்கு வந்து விட்டால் எல்லா விமர்சனங்களும் தாங்கக்கூடிய சக்தி எங்களுடைய தலைவர்கள் எங்களுக்கு வழங்கிய விட்டு சென்றுள்ளார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எங்கள் தொண்டன் கூட பயப்பட மாட்டான். உங்களுடைய உருட்டல், மிரட்டல், அவதூறு பேச்சுக்கெல்லாம் அடிபணியும் கட்சி அதிமுக அல்ல''என்றார்.

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.