Skip to main content

கடல் பாசி எடுக்கச் சென்ற பெண் மரணம்! வடமாநில தொழிலாளர்களைத் தாக்கிய கிராமத்தினர்!  

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Rameswaram woman passed away villagers in struggle

 

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது வடகாடு மீனவர் கிராமம். இந்தக் கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடிப்பு மற்றும் கடல் தொடர்பானதாக இருக்கிறது. இந்தக் கிராம மக்கள் கடல் பாசி சேகரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

 

வடகாடு கிராமம் பகுதியில் வசித்துவருபவர் பாலு. இவரது மனைவி சந்திரா. சந்திரா அவ்வப்போது கடல் பாசி சேகரிக்க கடலுக்கு செல்வது வழக்கம். எப்போதும் காலையில் சென்று மாலையில் சந்திரா வீடு திரும்புவார். அதுபோல், நேற்று காலை கடல் பாசி சேகரிக்க சந்திரா வீட்டைவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால், எப்போது போல் மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பதட்டமான அவரது கணவர் பாலு, தனது உறவினர்களுடன் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார். 


இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில்  வடகாடு அருகில் உள்ள நரிக்குழி என்ற இடத்தில் சந்திரா இறந்த நிலையில் இருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும், அவர் இறந்திருந்த இடத்திற்கு அருகில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டுவருகிறது. அதில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீது பாலு உறவினர்களுக்கும், வடகாடு கிராம மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு, அவர்களை தாக்கியுள்ளனர். மேலும், அந்த இறால் பண்ணையின் சில பகுதிக்கும் கிராம மக்கள் தீவைத்தனர். 

 

இந்தத் தகவல் காவல்துறையினருக்கு தெரியவரவே, உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடமாநில ஆறு பேரையும் மீட்டு, பற்றிய தீயையும் அணைத்தனர். மீட்கப்பட்ட ஆறு பேரையும் காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இறந்த சந்திராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.