Skip to main content

நாறும் ராமேஸ்வரம்...ஊக்குவிக்கப்படும் கட்டண கழிவறை?

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

புனித தலம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு யாத்ரீகர்கள் கூடும் இடத்தில் அதிகளவில் கழிவறைகளை திறந்து வைக்க, அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்காமல், அடைத்தே வைத்திருப்பதால் நகரத்தில் சுகாதாரக்கேடு மட்டுமின்றி கட்டணக் கழிவறைகளை ஊக்குவிக்கின்றனர் நகராட்சி நிர்வாகம் என்கின்றனர் நகரத்து மக்கள்.

 

 

rameswaram tourist place govt toilets not maintain issue

 

 

 

வட காசிக்கு நிகரானது தென்னகத்துக் காசியான ராமேஸ்வரம். இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்லும் புனித தலம் என்பதால் நகரத்தினை தூய்மையாக வைக்க பெருமளவில் நிதியினை தருகின்றது மத்திய, மாநில அரசுகள். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாலும் நகராட்சி நிர்வாகம் கழிவறைகளை முறையாக பராமரிக்காமல், கழிவறைகள் அடைத்து  வைத்திருப்பதால் யாத்ரீகர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு திறந்தவெளிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் முக்கிய பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகின்றது.

 

 

rameswaram tourist place govt toilets not maintain issue

 

 

இதே வேளையில், இதனைக் காரணமாக வைத்து இப்பகுதிகளில் தனியார் கழிப்பறைகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கழிவறைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யும் நிலைமை இப்பகுதியில் நிலவி வருவதால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் யாத்ரீகர்களும், பக்தர்களும் சேதமடைந்து மூடிய கழிவறைகளை சீரமைக்காமல், சுகாதார சீர்கேடு ஏற்பட வழி வகைகளை ஏற்படுத்தி வருவதுடன் தனியார் கழிவறைகளை நகராட்சி நிர்வாகம் ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.