Skip to main content

நாறும் ராமேஸ்வரம்...ஊக்குவிக்கப்படும் கட்டண கழிவறை?

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

புனித தலம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு யாத்ரீகர்கள் கூடும் இடத்தில் அதிகளவில் கழிவறைகளை திறந்து வைக்க, அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்காமல், அடைத்தே வைத்திருப்பதால் நகரத்தில் சுகாதாரக்கேடு மட்டுமின்றி கட்டணக் கழிவறைகளை ஊக்குவிக்கின்றனர் நகராட்சி நிர்வாகம் என்கின்றனர் நகரத்து மக்கள்.

 

 

rameswaram tourist place govt toilets not maintain issue

 

 

 

வட காசிக்கு நிகரானது தென்னகத்துக் காசியான ராமேஸ்வரம். இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்லும் புனித தலம் என்பதால் நகரத்தினை தூய்மையாக வைக்க பெருமளவில் நிதியினை தருகின்றது மத்திய, மாநில அரசுகள். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாலும் நகராட்சி நிர்வாகம் கழிவறைகளை முறையாக பராமரிக்காமல், கழிவறைகள் அடைத்து  வைத்திருப்பதால் யாத்ரீகர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு திறந்தவெளிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் முக்கிய பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகின்றது.

 

 

rameswaram tourist place govt toilets not maintain issue

 

 

இதே வேளையில், இதனைக் காரணமாக வைத்து இப்பகுதிகளில் தனியார் கழிப்பறைகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கழிவறைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யும் நிலைமை இப்பகுதியில் நிலவி வருவதால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் யாத்ரீகர்களும், பக்தர்களும் சேதமடைந்து மூடிய கழிவறைகளை சீரமைக்காமல், சுகாதார சீர்கேடு ஏற்பட வழி வகைகளை ஏற்படுத்தி வருவதுடன் தனியார் கழிவறைகளை நகராட்சி நிர்வாகம் ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.