Rameswaram Fishermen remanded in court

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் தான கடந்த ஜூன் 22 ஆம் தேதி (22.06.2024) காலை வழக்கம் போல் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விசைப்படகில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரைக் கைது செய்தனர்.

Advertisment

Rameswaram Fishermen remanded in court

அதாவது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கைதான 22 மீனவர்களையும் காங்கேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அதன் பிறகு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மேலும் தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரைக் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதே சமயம் தமிழக மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது கடந்த 5ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் 2வது முறையாக மீனவர்கள்ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூலை 18 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று (18.07.2024) மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூன்றாவது முறையாக மீண்டும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.