Advertisment

இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

Rameswaram fishermen chased away by the Sri Lankan Navy

Advertisment

இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டதாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 300க்கும் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இந்நிலையில் இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த பொழுது ரோந்து வந்த இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு 10 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்தவலை உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மீன் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தில் திரும்பி ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

fisherman Rameswaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe