Advertisment

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

ramanathapuram kilakarai

Advertisment

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா பள்ளி முன்பாக ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலால் வீர மரணமடைந்த தமிழக வீரர்களான அரியலூர் சிவசந்திரன், தூத்துக்குடி சுப்பிரமணியன் உட்பட 44 இராணுவ வீரர்களுக்கு கீழக்கரையில் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்த்தான் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் வீரவணக்கம், வீரவணக்கம் கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் இதுபோன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.

இதில் மஹ்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், இஞ்ஜினியர் கபீர், எஸ்.கே.வி சுஐபு,கி ழக்குதெரு ஜமாத் உதவித் தலைவர் அஜிகர், லெப்பை தம்பி, மக்கள் டீம் காதர், யாசின், ராசிக், சுபியான், ஜீவா உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

jammu and kashmir kilakarai pulwama attack Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe