ADVERTISEMENT

'ஆசிரியைக்கு பாலியல் தொல்லை'- ஆசிரியர் கைது

06:07 PM Dec 03, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாலியல் தொல்லை தொடர்பான புகாரில் அண்மைக்காலமாகப் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பொறுப்புகளில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் கோவையில் ஒரு மாணவியும், கரூரில் ஒரு மாணவியும் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் அரசு பள்ளி பெண் ஆசிரியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சாத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவருக்குச் சந்திரன் என்ற ஆசிரியர் ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT