இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுமாயாகுளம் அருகே உள்ள தொண்டாலை மேலக்கரை குளத்தில் நேற்று மாலை நண்பர்களுடன் சின்னமாயாகுளத்தை சேர்ந்த மோகன்தாஸ், லோகுவருண் மற்றும் அருண் ஆகிய மூவரும் மதுபோதையில் குளித்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அப்போது எதிர்பாராதவிதமாக மோகன் தாஸ் குளத்தில் மூழ்கினார். இதையடுத்து அப்பகுதியினர் ஏர்வாடி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் நேற்று இரவு 10 மணிவரை தேடினர். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் உடலை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று காலை 6 மணி முதல் தீயணைப்பு துறையினர் மற்றும் நாசா சமூகநல அமைப்பினை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அசாரூதீன், நசுரூதீன், பிரவின் ஆகியோரும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிற்பகல் 12 மணியளவில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்த ஏர்வாடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.