Skip to main content

அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்... "என்கவுண்டர்" நாடகமாடிய எஸ்.ஐ-க்கு தண்டனை!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

ஸ்டேஷனில் விசாரணைக்காக காத்திருந்த இளைஞனை, ஸ்டேஷனிலேயே வைத்துப் படுகொலை செய்த வழக்கில் இன்று சார்பு ஆய்வாளர் காளிதாசுக்கு ஆயுள் தண்டணையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 

இராமநாதபுர மாவட்டத்தின் வட கோடி எல்லையான, கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கிறது சுந்தரபாண்டிய பட்டணம் எனும் எஸ்.பி.பட்டனம். மாவட்டத்தின் 9 போலீஸ் சப்- டிவின்ஷகளில் பனிஷ்மெண்ட் ஸ்டேஷனாக வருவது, இந்த எஸ்.பி.பட்டணம் காவல் நிலையம் மட்டுமே. இந்த காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலத்தெருவினை சேர்ந்த சையது அலி பாத்திமா மகன் சையது முகம்மது மாற்றுத்திறனாளி அம்மாவிற்கு துணையாக உள்ளூரிலேயே உள்ள இறால் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறான். 
 

ramanathapuram district police court judgement


கடந்த 14/10/2014 அன்று பண்ணைக்கு சொந்தமான டூவீலரை பழுது நீக்க போலீஸ் ஸ்டேஷன் எதிரிலுள்ள ஆரோக்யதாஸ் வொர்க் ஷாப்-பிற்கு கொண்டுட்டு போயிருக்கின்றான். அங்கு டூவீலர் வேலைப் பார்த்ததில் திருப்தி இல்லை சையது முகம்மதுவிற்கு.. இதில், மெக்கானிக்கிடம் வாக்குவாதம் செய்ய, சப்தம் கேட்டு எதிரில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இரண்டு போலீஸ்காரங்க வந்து அவனை கூட்டிட்டுப் போயிருக்காங்க. அதற்குப் பிறகு அவனை பிணமாத்தான் பார்த்திருக்கின்றார்கள் உள்ளூர் ஆட்கள்.

 

சிறிது நேரத்திலேயே, "கத்தியை எடுத்து எஸ்.ஐ-யை குத்தினான். அதனால் தற்காப்பிற்காக சுட்டேன்" என்றார் போலீஸ் எஸ்.ஐ.காளிதாஸ். அதே வேளையில், "ஸ்டேஷனில் விசாரணைக்காக காத்திருந்த சையது முகம்மதுவை குடி போதையில் அடித்து கொன்று விட்டு, தான் தப்பிப்பதற்காக தன்னையே கத்தியால் கீறிக்கொண்டு இறந்த சடலத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு "என்கவுண்டர் " நாடகமாடியுள்ளார் எஸ்.பி.பட்டணம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காளிதாஸ்."எனக் கூறி உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர் எஸ்.பி.பட்டணம் மக்கள். ஐ.ஜி., டி.ஐ.ஜி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஸ்பாட்டிற்கு வந்த அப்போதைய மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் மயில்வாகனன், " இந்த விவகாரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதி தலைமையில் பிரேதப்பரிசோதனை மேற்கொள்வோம். தவறு யார் செய்தாலும் கண்டிக்கத்தக்கதே.." என வழக்கமாக கூறும் வார்த்தையை கூறி கூட்டத்தை கலைத்தார். அதன்பிறகு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அப்போதைய இராமநாதபுரம் ஜே.எம்.2 நீதிபதி வேலுச்சாமி முன்னிலையில் சையது முகம்மதுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ramanathapuram district police court judgement

 

அதன் பிறகு, இறந்த சையது முகம்மதுவின் மரணத்தைக் கண்டித்து தனது சொந்த செலவில் இந்த வழக்கை நடத்தி வந்தார் மதுரை வழக்கறிஞர் ஜின்னா. இந்நிலையில், சரியாக ஐந்து வருடம் கழித்து சார்பு ஆய்வாளர் காளிதாசுக்கு ஆயுள் தண்டணையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு எழுதியுள்ளார் ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசேகர். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பரப்பரப்பு உண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

IIT



 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.