Skip to main content

இ-பாஸ் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்., செம்மரக்கட்டைகள்... பொறிவைத்து பிடித்த போலீசார்!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

ramanathapuram district e pass police investigation


இறந்தவரின் உடல் வேறொரு இடத்திலிருக்கின்றது. அதனைக் கொண்டு வரவேண்டுமென நடித்து இ- பாஸ் பெற்று போதைப் பொருட்களையும், செம்மரக்கட்டைகளையும் கடத்திய சர்வதேச போதைக் கும்பலுடன் தொடர்புடைய ஒன்பது நபர்களைப் பொறி வைத்து பிடித்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டப் போலீசார்.
 


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை காவல் துணைச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெருமளவில் கள்ளக்கடத்தல் நடைப்பெற்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அறிமுகப்படுத்தியிருந்த பிரத்யேக எண்ணிற்குத் தகவல் வர, திருவாடனை டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமையில் தனிப்பிரிவு போலீஸார் எட்டு போலீஸ் குழுக்களாகப் பிரித்து அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 
 

ramanathapuram district e pass police investigation


இதனடிப்படையில் திருவாடனை கிழக்குக்கடற்கரை சாலையிலுள்ள வீரசங்கிலி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் செம்மரக்கட்டைகளைக் கைப்பற்றிய போலீசார், கட்டைகளைப் பதுக்கிய இருவரைக் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் கடத்தலுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பவுடர்கள், போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண பேஸ்ட் உள்ளிட்டவைகளையும், கடத்தலுக்குப் பயன்பட்ட கார் ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய சுமார் 20- க்கும் மேற்பட்ட செல்பேசிகள், லட்சக்கணக்கான பணம், போதைப் பொருட்களை எடை பார்க்கும் இயந்திரம், அதை பேக்கிங் செய்யும் இயந்திரம் என அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பத்திரிகையாளர் உட்பட 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


"ஊரடங்குக் காலத்தில் இறந்தவரின் உடலைக் கொண்டு வருவதாகக் கூறி இ- பாஸ் எனப்படும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையிலான அனுமதி சீட்டினையும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் அனுமதி சீட்டினையும் பத்திரிகையாளர் போர்வையில் குறுக்கு வழியில் பெற்று, அதனைக் கொண்டு கோவாவில் இருந்து பெங்களூருக்கும், அங்கிருந்து கோவை, மதுரை வழியாக ராமநாதபுரம் வந்தும் போதைப் பொருட்களையும், செம்மரக்கட்டைகளையும் கடத்தி வந்துள்ளனர். 
 

ramanathapuram district e pass police investigation


கடத்தப்பட்ட பொருட்களை நாட்டுப்படகுகள் மூலம் திருவாடனையிலிருந்து தொண்டி வழியாக கடல் மார்க்கமாக இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பவிருந்த நிலையில் பிடிப்பட்டுள்ளனர். பிடிப்பட்ட சரக்குகளின் மதிப்பு ஏறக்குறைய ரூபாய் 5 கோடிக்கும் மிகாமல் இருக்கும், இந்த விசாரணையின் இறுதியில் சில முக்கிய பிரமுகர்கள், இ- பாஸ் கொடுத்த அரசு அதிகாரிகள் மற்றும் சில பத்திரிகையாளர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது." என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.
 

http://onelink.to/nknapp


மாவட்ட எஸ்.பி.வருண்குமாரோ, "குறுக்கு வழியில் விரைவாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது போல் யாரும் ஈடுபட வேண்டாமென" அறிவுறுத்தினார். 

இந்தப் போதைக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஆளுங்கட்சி ஆதரவான தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளரின் சேவையைப் பாராட்டி குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.