ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கரோனா தொற்று உறுதி

j

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்தாக்கியுள்ளது. 32 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிவருகிறது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தீவிரமாக இருந்து வருகிறது. தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத்தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில், ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

corona virus District Collector Ramanathapuram district
இதையும் படியுங்கள்
Subscribe