Skip to main content

“தயக்கத்தோடு உதவி கேட்ட குடும்பம்... உடனடியாக உதவி செய்த எஸ்.பி..!"

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

Ramanatha Puram police Help

 

இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ள வருண்குமார், தனது அதிரடி செயல்கள் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். குறிப்பாக சட்ட விரோத செயல்களை தடுக்க, புகார்கள், குறைகளை தெரிவிக்க பிரத்யேக அலைபேசி எண்ணையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த எண்ணுக்கு வரும் ரகசிய தகவல்கள் அடிப்படையில், ஆக்சனும் அதிரடியாக இருக்கிறது. 

 

Ramanatha Puram police Help



தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பாம்பனை சேர்ந்த நபர், "எனது 12 வயது மகள் நரம்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு சேலம் மருத்துவமனையில் இருந்து கூரியர் மூலம் மருந்து வந்து சேரும். தற்போது ஊரடங்கால் மருந்து பெறுவது தடைபட்டுள்ளது. எனவே உதவுமாறு தயக்கத்துடனே கேட்டிருக்கிறார்.

இதையடுத்து சேலம் எஸ்.பி  தீபா கணிக்கரிடம் பேசிய எஸ்.பி வருண்குமார், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் மருந்து வாங்கி, காவல்துறை வாகனத்திலேயே பாம்பன் வரவழைத்து கொடுத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் மண்டபம் முகாமை சேர்ந்த பெண், மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டுள்ளார். அவருக்கு காவல் துறை வாகனத்தை அனுப்பி, சிகிச்சை முடிந்த பிறகு அதே வாகனத்தில் வீடு திரும்ப ஏற்பாடு செய்திருக்கிறார் எஸ்.பி.!

“காப்பாற்றுபவன் கடவுள் என்றால், காக்கிச் சட்டை போட்டவர்களும் கடவுள்தான்” என்பதற்கு சாட்சியாக இருக்கிறார்கள் வருண்குமாரும், தீபா கணிக்கரும்.!


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.