Skip to main content

பிரசவத்தின் போது ஊசி வைத்து தைத்த மருத்துவர்!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

பிரசவம் முடிந்து பெண் குழந்தை ஈன்ற நிலையில், கவனக்குறைவாக மருந்து நிரப்பப்பட்ட ஊசியுடன் கூடிய சிரிஞ்சினை பெண்ணின் பிறப்பு உறுப்பிற்குள் வைத்து தைத்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்

ramanadhapuram district women hospital doctors



ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவ்வாய்க்கிழமை இரவினில் அருகிலுள்ள மறவாட்டி வலசை கிராமத்தை சேர்ந்த ரம்யா பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகுந்த சிரமத்திற்கிடையே புதன்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்த நிலையில், தையல் போடுவதற்காக தயாராகிய மருத்துவக்குழு மருந்து நிரப்பப்பட்ட ஊசியுடன் கூடிய சிரிஞ்சினையும் அங்கே வைத்து தைத்திருக்கின்றது. 
 

ramanadhapuram district women hospital doctors



சற்று நேரத்தில் வலி அதிகமாகி ரம்யா துடிதுடித்த நிலையில் மேற்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கேயும் பலனளிக்காததால்  உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட, பிறப்புறப்பில் மருந்து நிரப்பப்பட்ட ஊசியுடன் கூடிய சிரிஞ்ச் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டு ரம்யாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறன்றனர். 


இந்நிலையில், கவனக்குறைவாக ஊசி வைத்து தைத்த தகவல் பரவியதையடுத்து, ரம்யாவின் உறவினர்கள் உச்சிப்புளி அரசு மருத்துவமனை முன், கவனக்குறைவாக நடந்து மருத்துவர் மற்றும் செவிலியரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கவனக்குறைவாக பணி மேற்கொண்ட மருத்துவர் ஜாசீர் மற்றும் செவிலியர் அன்பகச்செல்வி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவிக்க போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.