ராமஜெயம் கொலை வழக்கில் இருவரிடம் விசாரணை! 

ramajeyam incident police investigation trichy

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் கொலை இருவரிடம் சிறப்பு புலனாய்வு தனிப்படையினர், விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த 2012- ஆம் ஆண்டு நடைபயிற்சிக்கு சென்ற கே.என்.ராமஜெயம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல், காவல்துறை திணறி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2001- ஆம் ஆண்டு தி.மு.க. தலைமை செயற்குழுவின் உறுப்பினராக இருந்த எம்.கே.பாலனும், நடைபயிற்சியின் போது கடத்தப்பட்டார். இரு கடத்தலும் ஒத்துப்போவதாக கருதப்படுவதால் எம்.கே.பாலன் வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் குமார் ஆகியோரிடம் திருவெறும்பூரில் சிறப்பு புலனாய்வு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ramajayam trichy
இதையும் படியுங்கள்
Subscribe