அயோத்தி தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் கட்டப்படும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலமாக நூற்றாண்டு கால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. அயோத்திவழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தியளிக்கிறது. இந்த தீர்ப்பை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும் என கூறினார்.