Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பணிகளைத் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

மத்திய அரசு அமைத்த ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, இந்தக் கோவிலைக் கட்டிவருகிறது. இந்த நிலையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் வைக்க ராமர் சிலை, சென்னை திருப்பதி கோவிலிலிருந்து பூஜை செய்து அனுப்பிவைக்கப்பட்டது.