Advertisment

பேரணியில் பொதுமக்களுக்கு இடையூறு கூடாது! - ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அறிவுறுத்தல்!

வரும் செப்.5 ஆம் தேதி கலைஞரின் 30ஆம் நாள் நினைவு நாளை முன்னிட்டு, கலைஞர் நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது என மு.க அழகிரி ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செப்.5 காலை 10 மணி அளவில் அண்ணாசிலை அருகில் உள்ள காவல்நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும். இப்பேரணியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தர உள்ள கலைஞரின் உடன்பிறப்புகள், எந்தவித ஆரவார, ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறு தராமலும் நடந்த கொள்ள வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment
mk alagiri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe