Skip to main content

ராஜ்ய சபா எம்பி பதவியை புது முகங்களுக்கு வழங்க தயாராகும் அதிமுக, திமுக கட்சிகள்!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளன. இவர்களில் ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதியை நேற்று அறிவித்துள்ளது. அதில் ஜூலை 1 ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் எனவும், வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஜூலை 8- ஆம் தேதி கடைசி நாள் என தனது அறிவிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுகவிற்கு 3 உறுப்பினர்களும், திமுகவிற்கு 3 உறுப்பினர்களும் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

 

 

DMK AND ADMK RAJYA SABHA MPS SEAT CANDIDATES MAY BE NEW FACES

 

 

 

மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிர ஆலோசனை ஈடுப்பட்டுள்ளன. மேலும் திமுகவில் உள்ள பெரும்பாலான மூத்த தலைவர்கள் மக்களவை உறுப்பினர்களாகவும், மாநிலங்களவை உறுப்பினர்களாகவும் உள்ளனர். இதனால் அக்கட்சி புது முகங்களுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுகவிற்கு ஒரு ராஜ்ய சபா எம்பி பதவி வழங்கப்படும் என திமுக கூட்டணி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் காரணமாக திமுக கட்சிக்கு இரு மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே கிடைக்கும். அதே போல் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக உறுதியளித்துள்ளது. இந்நிலையில் அக்கட்சிக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே கிடைக்கும்.

 

ADMK ALLIANCE

 


அதிமுகவில் முக்கிய தலைவர்கள் பலரும் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததால், மாநிலங்களவையில் இடம் பெற முயற்சி செய்து வருகின்றன. அந்த பட்டியலில் அதிமுக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு ராஜ்ய சபா எம்பி வழங்க அதிக வாய்ப்புள்ளது. அதே போல் மீதமுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.