Skip to main content

கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி உள்ளதா??? தொல்லியல் துறை ஆய்வு

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜன் சமாதி இருக்கின்றதா என்பதை ஆராய்ச்சி செய்து அறிக்கை அனுப்ப வேண்டுமென தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தொல்லியல் துறையினர் இன்று ஆய்வை துவங்கியுள்ளனர்.

 

rajarajacholan



தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜசோழனின் உடல் கும்பகோணம் அருகே உடையாளூரில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கான அடையாளங்களாக அங்கு இருக்கும் பழங்கால கற்களை காட்டுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். அந்த இடத்தை வணங்கியும் வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ராஜராஜ சோழனின் சமாதி உடையாளூரில்தான் உள்ளதா என அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 

தஞ்சையை ஆண்ட  சோழப் பேரரசர்களின் அதிகமாகப் பேசப்பட்டவர் முதலாம் ராஜராஜ சோழன். கி.பி. 985 ஆம் ஆண்டு முதல் 1014 ஆம் ஆண்டு வரை தஞ்சை, கொற்கை, உள்ளிட்ட இடங்களை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்துள்ளான். 
 

மிகச்சிறந்த மன்னனாக வாழ்ந்த ராஜராஜ சோழன், வரலாற்றுச்சிறப்புமிக்கதும், சிற்பக்கலை நிறைந்ததுமான தஞ்சை பெருவுடையார் பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில்  உள்ளிட்ட பல கோயில்களை கட்டியுள்ளான். தஞ்சை பெரியகோயில் கட்டிடக்கலையின் சாதனை சான்றாக, உலகளவில் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இதனால் வெளிநாட்டவர்கள் இந்த கோவிலைக் கண்டு அதிசயித்து வருகின்றனர். அப்படி உலக புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவரான ராஜராஜ சோழனின் சமாதி உடையாளூர் என்கிற குட்கிராமத்தில் இருப்பதாக பல ஆண்டுகளாக கூறிவருகின்றனர். சிலர் தஞ்சையில் தான் உள்ளது என்கின்றனர்.
 

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் ,"கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், வங்காள விரிகுடா அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராஜராஜ சோழனுக்கு மிகப் பெரிய சிலை அமைக்க வேண்டும்". என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

 

rajarajacholan



இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட  நீதிபதிகள் எல்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அமர்வு தமிழக அரசுக்கு அகழ்வாராய்ச்சி மூலம் ராஜராஜசோழன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் உடையாளூர் தானா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
 

அதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், தங்கதுரை, பாஸ்கர், லோகநாதன், சக்திவேல், ஆகியோர் கொண்ட ஐவர் குழு உடையாளூர் கிராமத்திற்கு வந்தனர். அங்கு ராஜராஜ சோழன் சமாதி அமைந்திருப்பதாக கூறப்படும் இடத்தை சுற்றி தானியங்கி விமானம் 3 மூலம் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பூமிக்கு அடியில் ஒரு மீட்டர் தூரம் அளவிற்கு என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்பதை தற்பொழுது ஆய்வு செய்து அவற்றை படங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
 

முதற்கட்ட ஆய்வு பணிகள் இன்று துவங்கியிருப்பது, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.