Skip to main content

’நடிகர் சங்க தேர்தலில் என்னால் வாக்களிக்க இயலாது’ -ரஜினிகாந்த் வருத்தம்

Published on 22/06/2019 | Edited on 22/06/2019


 நடிகர் சங்க தேர்தல்  வரும் 23-ந்தேதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  இத்தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ்-ன் சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் இறங்கின. தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தபோது, பாதுகாப்பு கருதி அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

 

d

 

இதையடுத்து தேர்தல் தள்ளிப்போகும் என்று இருந்த நிலையில்,   நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாளை தேர்தல் என்று திடீரென இன்று உத்தரவு வந்ததால், இந்த தேர்தல் முறைப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.  நிறைய குளறுபடிகள் வரும். வெளியூரில் இருப்பவர்கள் தபால் வாக்குகள் செலுத்த முடியாத நிலை ஏற்படும்  என்று சுவாமி சங்கரதாஸ் அணி தெரிவித்தது.  

 

அதன்படியே, மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ’’நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெற இருக்கின்ற நிலையில் என்னால் வாக்களிக்க இயல்லாது.   மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான  தபால் வாக்கு படிவம் தாமதமாக கிடைத்தது.  தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் என்னால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.   தபால் வாக்கு படிவத்தை முன்கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது.   என்னால்  வாக்களிக்க இயலாமல் போனதற்காக வருந்துகிறேன்.   இது போன்ற துரதிர்ஷ்டமான நிலை வருங்காலகளில் ஏற்படக்கூடாது’’என்று தெரிவித்துள்ளார்.   
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.