Skip to main content

ராட்சஷ ஆழ்குழாய் மூலம் தண்ணீர் விற்பனையை தடுத்த பொதுமக்கள் ! 

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

கடந்த சில வருடங்களாகவே ராஜீவ்நகர் மற்றும் மணப்பாறை நகரப் பகுதிகளில் பல இடங்களில் ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் அமைத்து தண்ணீரில் ஒரு பெரிய குளம் போன்று அமைத்து அதில் நிரப்பி அதில் தண்ணீரை எடுத்து கொஞ்ச கொஞ்சம் கொள்ளை லாபத்திற்கு விற்று பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றனர். ராட்சஷ இயந்திரங்கள் கொண்டு தண்ணீர் தொடர்ச்சியாக எடுத்து கொண்டு வருதால் அதனை சுற்றி உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து பொதுமக்கள் தண்ணீருக்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

 

m


இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மதிமுக மாநில தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சித்ரா, நகராட்சி ஆணையர் மனோகரன், காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 

m

 

பேச்சுவார்த்தையின் முடிவில் உடனடியாக சட்டவிரோதமாக தண்ணீர் விற்ற தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி குடிநீர் விற்கக் கூடாது அதற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நகராட்சி அலுவலர்கள் மின் மோட்டார்களை பறிமுதல் செய்து பாதாளக் கிணற்றை மூடினார்கள். வட்டாட்சியர் மோட்டார் அறையை பூட்டி சீல் வைத்தார்.

 

m

 

அதன்பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் மினிக்கியூர் சதீஸ், மினிக்கியூர் முருகன், முத்துராஜா, கண்ணன், சுப்பையா, கிருஸ்ணமூர்த்தி, பரமன், ராதாகிருஸ்ணன், சிதம்பரம், முத்துக்குமார், பாண்டி, ஆட்டோ சேட்டு, ஹரீஸ் நடராஜன், ராஜராஜன், பழக்கடை நாகராஜன், அடைக்கலம் பூசாரி, அருணாச்சலம், மேஸ்திரி கதிரேசன், சரஸ்வதி, பாக்கியம், கௌசல்யா, தனம், தாஜீ மலர், பொன்னம்மாள், அகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.