சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை குறித்து மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.