Skip to main content

விஜய்க்கு ரஜினியின் ஆதரவு!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
r v

 

தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்கார் அதிமுக, திமுகவுக்கு எதிராக கொளுத்திப்போட்டாலும் ஆளுங்கட்சிக்கு எதிராக சரவெடி கொளுத்தியிருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.  இதையடுத்து  செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்.  இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தார்.   இதன் பின்னர்,  சர்கார் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுகவினர் கிழித்தனர்.     படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய அவர் வீட்டிற்கு போலீசார் சென்றதாகவும் தகவல் வந்தது. சர்க்கார் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதா என்று தியேட்டர்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்த மறைமுக மிரட்டலை அடுத்து  சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்.

 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சர்காருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

 ’’தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும்,  திரையிடத்தடுப்பதும்,  படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும்,   சட்டத்திற்குப் புறம்பான செயல்கள்.  இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.’’

 

ட்

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.