ADVERTISEMENT
சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கடலூரைச்சேர்ந்த பிரதீப் என்பது தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு மிரட்டல் விடுத்த நபரே ரஜினி வீட்டிற்கும் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
முதல்வர் மற்றும் ரஜினிகாந்த் வீட்டிற்கு ஏன் புவனேஷ் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Show comments