கர்ப்பிணி பெண்களின் வளைகாப்பும் ரஜினிகாந்தின் வாழ்த்தும் - தூத்துக்குடியில் நெகிழ்ச்சி

Rajinikanth's greetings for pregnant women's baby showers; Resilience in Tuticorin

நடிகர் ரஜினிகாந்தின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 21 சீர்வரிசை பொருட்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் 73 ஆவது பிறந்த நாள் டிச.12ல் கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத்தெரிவித்திருந்தனர். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்கடிதம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி ரஜினிகாந்த் ஒருங்கிணைந்த கிளை மன்றங்கள் சார்பில் 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.

வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு 21 பொருட்கள்அடங்கிய சீர்வரிசை வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் குரல்பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தக் குரல்பதிவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, “இன்று தூத்துக்குடியில் நடைபெறும் வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இந்தக் குரல்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

rajinikanth tutucorin
இதையும் படியுங்கள்
Subscribe