Skip to main content

 ரஜினிகாந்தின் பெற்றோருக்கு மணிமண்டபம்! திருச்சியில் ஒரு நாச்சிக்குப்பம்!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 


 திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு தமிழக மக்கள் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அவர்களின் மேல் உள்ள பிரியத்தில் முதல்வர் பதவியையே கொடுத்திருக்கிறார்கள். அதே போல நடிகர்கள், நடிகைகள் பெயரில் பொருட்கள், வெளி வந்து சந்தைகளில் அதிக அளவில் விற்றுவருவது வாடிக்கை தான். இதற்கு ஒருபடி மேல் போய் நடிகை குஷ்புவுக்கு திருச்சியில் கோவில் கட்டினார். அப்போது அது பெரிய அளவில் அதிர்ச்சியாகவும்,ஆச்சரியமாகம் பரபரப்பாக பேசப்பட்டது. 

 

r

 

தமிழக அரசியலில் முழுநேர அரசியலுக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் பெற்றோருக்காக திருச்சியில் மணிமண்டபம் கட்டியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியமான தகவல். 

 

r

 

ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருக்கும் ஸ்டாலின் புஷ்பராஜ்.   ரியல் எஸ்டேட் வியாபாராம் செய்து வரும் இவர். 2009 வருடங்களுக்கு முன்பு ரஜினி உடல்நலம் சரியில்லாத நாட்களில் இறைவனிடம் வேண்டுதல் செய்யும் போது, என் தலைவரின் உடல் சரியானால் அவரை பெற்றெருத்த தாய் தந்தைக்கு மணிமண்டபம் கட்டுகிறேன் என்று வேண்டுதல் செய்திருந்தாராம். ரஜினிகாந்தின் சொந்தவூரான நாச்சிக்குப்பம் - செய்திருக்க வேண்டியதை திருச்சியில் ரஜினியின் பெற்றோர் ராம்பாய் -ரானேஜிராவ் இரண்டு பேருக்கு 35 இலட்ச ரூபாய் செலவில் தன்னுடைய தனிப்பட்ட வேண்டுதலுக்காக மணி மண்டபம் தயார் செய்திருக்கிறார்கள். 

 

r

 

இதை புனிதப்படுத்துவதற்காக மார்ச் 25ம் தேதி நாள் குறித்து இன்று ரஜினியை நேரடியாக சந்தித்து  காலை அழைப்பிதழை கொடுத்திருக்கிறார்கள். 

 

r

 

இந்த ரஜினிகாந்த் தாய் தந்தையரின் உருவங்களை புனிதப்படுத்தும் பூஜையை ரஜினிகாந்த் குடும்பத்தினரே செய்கிறார்கள் என்பதால், இதற்கு ரஜினிகாந்த் குடும்பத்துடன் நேரடியாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ரஜினிகாந்த மன்றத்தில் உள்ளவர்கள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.