Skip to main content

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ரஜினியை சந்தித்த காரணம் என்ன?

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

 

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வரான ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 75 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற் கடித்து வெற்றி பெற்றார்.   ஆனால் தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதியில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.  ஒரு தொகுதியில் மட்டும் தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமார் தொடர்ந்து இழுபறிக்கு பின் வெற்றி பெற்றார்.  அதிலும் கூட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.

 

r

 

அப்படி இருந்தும் லோக்கலில் இருந்து கொண்டே ஓபிஎஸ் வராமல் மகனுடன் மாவட்ட செயலாளரை அனுப்பி  எம்.பி. சான்றிதழை வாங்க வைத்தார்.   அதன் பின் ரவீந்திரநாத் குமாரும் எம்பி.  சான்றிதழுடன் சென்னை சென்று முதல்வர் எடப்பாடியை  சந்தித்து ஆசி பெற்றவர், அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சந்தித்து ரவீந்திரநாத் குமார் ஆசி பெற்றார்.  ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென ஒபிஎஸ் மகன் சந்தித்த மர்மம் என்ன என்று மாவட்ட பொறுப்பில் உள்ள சில ர.ர.களிடம் கேட்டபோது..‌..

 

‘’ஓபிஎஸ் தனது  மகன் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை கண்டு கொள்ளாமல் இருந்தார்.   அந்த  இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில்  திமுக அமோக வெற்றி பெற்றது.   அப்படி இருந்தும் கூட ஓபிஎஸ் தனது மகனுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மோடியையும்  ஓபிஎஸ் கூடிய விரைவில் சந்திக்க இருக்கிறார்.

 

 இந்த நிலையில் தான் பிரதமர் மோடியிடம் நெருக்கமாக  இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததை  திடீரென ஓபிஎஸ் மகன் சந்தித்து மத்திய மந்திரி பதவிக்காக பிரதமர் மோடியிடம் பரிந்துரை செய்ய வலியுறுத்தி ‌இருக்கிறார்.  அந்த அளவிற்கு ஓபிஎஸ் தனது சுயநலம் மூலம்  மகனை வெற்றி பெற வைத்து மத்திய மந்திரி பதவியையும்  வாங்கி  கொடுக்க ஆர்வம் காட்டி வருகிறாரே தவிர,  இந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தும் கூட அதை கண்டு கொள்ளாமல் ஓபிஎஸ் தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினி வரை ஓபிஎஸ் தனது மகனுக்காக காய் நகர்த்தி வருகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.