Advertisment

விரைவில் ரஜினிக்கு சம்மன்... அடுத்த மாதம் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு!

rajinikanth... opportunity to call for hearing next month

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடுவிவகாரத்தில் கருத்துத்தெரிவித்தநடிகர்ரஜினிகாந்த் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்படும் எனஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்துவிசாரிக்கும்ஒரு நபர் விசாரணை ஆணையம்தெரிவித்துள்ளது.

Advertisment

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்குஎதிரானபோரட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டப் பிறகு, காயம்பட்டவர்களைக் காணச்சென்ற நடிகர் ரஜினிகாந்த் ''போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ்நாடு சுடுகாடுஆகிவிடும். இந்தத்துப்பாக்கிச்சூட்டுக்கு, சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதேகாரணம்''எனச் செய்தியாளர்களைச் சந்திக்கையில் கருத்துத்தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே நடிகர்ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்துவிசாரிக்கும்அருணாஜெகதீசன், விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் சேகர் ஆகியோர்தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்திக்கையில், அடுத்த மாதத்திற்குள் ரஜினிகாந்தைவிசாரணைக்குஅழைக்கவாய்ப்புள்ளது.மீண்டும் சம்மன் அனுப்பப்படும் எனத்தெரிவித்தார்.

rajinikanth Sterlite plant Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe