ADVERTISEMENT
பிரபல திரைப்பட பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா(வயது60) நேற்று முன் தினம் சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று சென்னையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ADVERTISEMENT
மயிலாடுதுறையைச் சேர்ந்த போத்ரா, பூர்வீகத் தொழிலான வைர வியாபாரம் செய்து வந்தவர், பின்னர் சினிமாவில் முதலீடு செய்தார். நு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்த போத்ரா, தனக்கு கடன் தரவேண்டும் என்று இயக்குநர் கஸ்தூரிராஜா மீதும், அந்த வழக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடுத்து வந்தார். இன்னும் பலர் மீதும் வழக்குகள் தொடுத்திருந்தார். போத்ரா மீதும் பலர் கந்துவட்டி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் அவர் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
Show comments