Skip to main content

ரஜினிகாந்த் ஒரு பாஜக பினாமி!: சிஐடியு சவுந்திரராஜன் தாக்கு!

Published on 01/06/2018 | Edited on 01/06/2018
citu


நடிகர் ரஜினிகாந்த், பாஜகவின் பினாமி போல செயல்பட்டு வருவதாக சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் சேலத்தில் இன்று கூறினார்.

சிஐடியு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சேலத்தில் இன்று (மே 31, 2018) நடந்தது. அதில் பங்கேற்க வந்த சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்திரராஜன், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது:  ’’மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. அதேநேரம், அந்த ஆலைக்கு பதிலாக மக்களை பாதிக்காத வகையில் அந்த இடத்தில் வேறு ஒரு தொழிற்சாலை அமைத்து அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து, அரைவேக்காட்டுத்தனமானது. சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று அவர் யாரை குறிப்பிட்டுச் சொன்னார் என்று தெரிவிக்க வேண்டும். காவல்துறையினரையா? அல்லது உளவுத்துறையினரையா? இதில் யார் சமூக விரோதி என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.


காவல்துறைக்கு ஆதரவாகவே பேசி வரும் அவர், பாஜகவின் பினாமி போலவே செயல்பட்டு வருகிறார். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து அவர் வாய் திறக்காதது ஏன்?. அவருடைய கருத்துகளை மக்கள் கொஞ்சமும் ஏற்க மாட்டார்கள். காவல்துறையினர் எழுதிக் கொடுத்ததை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் பேசினார். முதல்வர் பேசியதையே ரஜினியும் மீண்டும் பேசியிருக்கிறார்.

ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படும்போது, அதை எதிர்த்து பல வடிவங்களில் போராட்டம் நடத்தப்படலாம். அதன் ஒரு வடிவம்தான், திமுக நடத்தும் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம்.

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஜிண்டால், அதானி போன்ற பெரும் நிறுவனங்களுக்காக கொண்டு வரப்படவுள்ள பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய செய்ய வேண்டும்.

மேட்டூர் கெம்ப்பிளாஸ்ட் தொழிற்சாலை அருகே மேலும் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் மக்களுக்கு மேலும் தீங்கு ஏற்படும் என்பதால், அந்த ஆலையை துவக்கக் கூடாது. ஆலை தொடங்கும் நடவடிக்கைகளை எதிர்த்து சிஐடியு போராடும்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம்” - நடிகர் ரஜினிகாந்த்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி (24.8.2021) சட்டமன்றப் பேரவை விதி 110 ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Lets call it an kalaignar Taj Mahal says actor Rajinikanth

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞரின் நினைவிடம் மிகவும் அருமை. ரொம்ப அற்புதம். இதனை கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.