Skip to main content

  ரஜினி முதல்வராக சிதம்பரம் கோயிலில் மகா யாகமா? சத்தியநாரயணராவ் விளக்கம்

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

 

சிதம்பரம்  நடராஜர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாரயணராவ்  மகா யாகம் செய்தார்.  சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற யாகத்தில் சத்தியநாரயணராவ் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள், நடிகர் ரஜினிகாந்தின் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

 

r

 

மகா யாகத்தில்  100 சுமங்கலி பெண்களுக்கு துணிமணிகள் வழங்கப்பட்டது.  பரங்கிப்பேட்டையில் உள்ள பாபா பிறந்த இடத்தில் 250 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  திரைப்பட நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா தமிழ்நாட்டில் அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். தமிழ்நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும் எனது சகோதரர் நீடுடி வாழ வேண்டும் என்று மகா யாகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும்  2021 ஆம் ஆண்டில் ரஜினி முதல்வராக வேண்டும் என்று சிறப்பு யாகம் செய்தீர்களா என்று செய்தியாளர்கள்  கேட்டதற்கு அப்படி ஒன்றும் இல்லை என்றார்.

 

r

 

எனது தம்பி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்.  வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மன்றம் போட்டியிடாது. அப்படியே போட்டியிடுவது குறித்து ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும்  என்றார்.

 

r

 

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க   கர்நாடக முதல்வரை சந்தித்து தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவுப்படி கொடுக்கவேண்டிய  தண்ணீரை  கொடுக்க வலியுறுத்துவீர்களா? என்றதற்கு கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை என்றார். தமிழகத்தில் மழை பொழியவே யாகம் செய்துள்ளோம் என்று மழுப்பினார். இதில் சிதம்பரம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.