r

சென்னையில் இருந்து இன்று காலை மைசூருக்கு புறப்பட்ட விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட 48 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார் பைலட். அனுமதி கிடைத்ததும் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

உரிய நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை பைலட் உடனடியாக கண்டுபிடித்து விட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் நிம்மதி பெரும்மூச்சு விட்டனர்.