Skip to main content

ரஜினிகாந்த் டயலாக்கை பேச மறுத்த விஜய்சேதுபதி!

Published on 09/12/2018 | Edited on 09/12/2018
v

 

ரஜினி மாதிரி எனக்கு நடிக்கத்தெரியாது.   ரஜினி பேசுவது மாதிரி எனக்கு மிமிக்ரி கூட தெரியாது.  நான் நானாகத்தான் நடிப்பேன்; பேசுவேன் என்று பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவை பரபரக்க வைத்தார் நடிகர் விஜய்சேதுபதி.

 

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.   இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்த சசிகுமார், பாபிசிம்ஹா இருவரும் மேடையில் பேசியபோது, தாங்கள் ரஜினிக்கு தீவிர ரசிகர் என்பதை வெளிப்படுத்தினர்.  நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சசிக்குமாரையும், பாபி சிம்ஹாவையும் ரஜினியின் டயலாக்கில் பிடித்ததை பேசச்சொன்னபோது,  அண்ணாமலை படத்தில் தொடையை தட்டி ரஜினி பேசுவது மாதிரி பேசிக்காட்டிவிட்டு,  யார் இந்த டயலாக்கை பேசினாலும் அது ரஜினி சார் பேசியது மாதிரி ஆகாது என்றார் பாபி சிம்ஹா.   தளபதி படத்தில் வரும் ’நட்புன்னா என்னன்னு தெரியுமா, நண்பன்னா என்னன்னு தெரியுமா, சூர்யான்னா தெரியுமா ’என்கிற வசனத்தைப் பேசிக் காட்டினார்.

 

இதே போல் விஜய் சேதுபதியிடம், உங்களுக்கு பிடித்த ரஜினி டயலாக் ஒன்றை பேசுங்கள் என்று கேட்டபோது,  ‘’எனக்கு வராது’’ என்றார்.  மீண்டும் அவரிடம்,  ரஜினி சார் படத்திலிருந்து ஏதாவது ஒரு டயலாக் சொன்னால் போதும் என்றபோதும்,  ‘’எனக்கு ரஜினி சார் மாதிரி நடிக்கத்தெரியாது.  அவர் மாதிரி மட்டுமல்ல யார் மாதிரியும் எனக்கு நடிக்கத்தெரியாது.   நான் நானாகத்தான் நடிப்பேன்; பேசுவேன்.  நடிக்க வாய்ப்பு கேட்ட போன போது கூட யார் மாதிரி நடிச்சு காட்டப்போறீங்க என்று கேட்டதும், எனக்கு யார் மாதிரியும் நடிக்க தெரியாது.  ரஜினி சார் பேசுவது மாதிரி கூட எனக்கு மிமிக்ரியும் தெரியாது என்று சொல்லிவிட்டேன்.  அதுதான் அவர்களுக்கும் பிடித்தது.   அதனால் எனக்கு ரஜினி சார் மாதிரி பேச வராது...விட்டுடுங்க...’’என்று கூறி, அரங்கை பரபரக்க வைத்தார்.

 

p


மேலும் அவர் விழாவில் பேசியபோது,   ‘’நான் காணாத கணவு ஒன்று நினைவு ஆகியிருக்கிறது.  இந்த மனுசனோட (ரஜினி) எல்லாம் சேர்ந்து நடிப்பேன்னு நான் நினைச்சு கூட பார்த்தது கிடையாது.  அவர் அடிக்கடி வானத்தை பார்த்து ஆண்டவன் இருக்கிறான் என்று சொல்லுவார்.  உண்மையில் அவர் உழைப்பார்த்து அந்த ஆண்டவனே கை தட்டுவான்.  நேத்து வந்தவன் நான்.   எனக்கே சில சமயங்களில் எதுக்கு அப்படி என்று ஒரு மிதப்பு வரும்.  ரஜினி சார் மாதிரி எனக்கும் அர்ப்பணிப்போட வேலை பார்க்க வேண்டும் என்கிறதை அந்த ஈடுபாட்டை அந்த ஆண்டவன்தான் தரணும் என்று வானத்தை நோக்கி கைநீட்டி பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.