Skip to main content

டேங்கர் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கும் ரஜினி மக்கள் மன்றம்!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

தண்ணீர் பஞ்சம் தமிழகத்தை புறட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. தண்ணீர் தாகத்தை தீர்க்கவேண்டி ஆளும் அதிமுக அரசோ கோயில், கோயிலாக சென்று யாகம்,புளியாதொரை, என பொழுதை கழித்துவருகின்றனர். திமுக போரிட்டத்தில் இறங்கி குரல்கொடுத்துவருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் தண்ணீரை  டேங்கர் மூலம் கிராமங்களுக்கு வழங்கிவருகிறது.

Rajini people's forum providing drinking water by tanker trucks!


தண்ணீர் பஞ்சம் சென்னையை மட்டுமல்ல காவிரி பாயும் டெல்டாபகுதிகளையும் விட்டுவைக்கவில்லை, திருவாரூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளான திருத்துறைப்பூண்டி தாலுக்கா பகுதிமக்கள் கொள்ளிடம் கூட்டக்குடி நீரையே நம்பியிருக்கிறனர், சமீப காலமாக கொள்ளிடத்தில் நடந்துவரும் மணல்கொள்ளையால் கொள்ளிடம் கரையோர பகுதிகளிலூம் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. அதோடு மின்சாரத்தட்டுப்பாடும் அதிகமானதால் தண்ணீர் வரத்து குறைந்துபோனது. கொள்ளிடம் கூட்டுக்குடிநீரை நம்பியிருக்கும் மக்கள் பெருத்த அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.

இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள சில கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை டேங்கர் லாரிகள் மூலம் தீர்த்துவைக்கின்றனர் ரஜினிமக்கள் மன்றத்தின். திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பள்ளங்கோவில்,கடியசேரி,கொத்தமங்கலம்.  உள்ளிட்ட கிராமங்களுக்கு தினசரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவச குடிநீர் வழங்கிவருகின்றனர்.

அதனை திருவாரூர் மாவட்ட செயலாளர் கோ.தாயுமாணவன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.