Skip to main content

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

rajini makkal mandram leaders instruction

பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவர் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25- ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது; பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற தலைமை எச்சரித்துள்ளது. ஊழலை ஒழிக்கவே கட்சித் தொடங்கப்படுகிறது; பதவி தவிர பணம் பெறக்கூடாது. மேலும், சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்கவும் நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்