Skip to main content

ரஜினி மன்ற நிர்வாகி திடீர் மரணம்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

ரஜினி அரசியல் வருகை குறித்து நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று (12.03.2020) ரஜினியின் பத்திரிகையாளர் சந்திப்பு தமிழகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
 

இந்த நிலையில் திருச்சி அடுத்த மணப்பாறையில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்தவர் பாபா முருகேஷ். இவர் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றம் துணைச் செயலாளராக பதவி வகித்தார். இவருக்கு வயது 52. மிகத் தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினியின் அரசியலை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.

Rajini makkal mandram leader incident in trichy

இந்த நிலையில் இன்று ரஜினியின் பேட்டிக்கு பிறகு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இதுகுறித்து மணப்பாறை ரஜினி மன்ற நகர செயலாளர் கணேசனிடம் பேசினோம்.
 

கணேசன் நம்மிடம், "இன்று அதிகாலை பாபா முருகேசன் திருச்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதற்காக மணப்பாறைக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த போது கேர் கல்லூரி அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடல் முழுவதும் காயமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 

மருத்துவமனையில் ரஜினியின் பேட்டியை செல்போனில் நேரலையாக பார்த்த பாபா முருகேசன் அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இதைக் கேள்விப்பட்ட திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் அனைவரும் வருத்தம் அடைந்து உள்ளோம்.
 

பாபா முருகேசன் தன் வாழ்நாள் ஆசையாக தலைவர் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தார். ஆனால் கடைசி வரை அவருடைய ஆசை நிறைவேறாமல் போனது.
 

சில நாட்களுக்கு முன்பு தலைவர் ரஜினியை பார்க்க முடியாமல் போனால் ஒரு வேலை எனக்கு இறப்பு ஏற்பட்டால் ரஜினி மன்றத்தின் கொடியை என் உடல் மீது போர்த்தி என்னை அடக்கம் செய்ய வேண்டும்" என்றார்.
 

பாபா முருகேசனுக்கு 24 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் அரசியல் பிரவேசம் பத்திரிகையாளர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஜினி மன்றத்தின் நிர்வாகி விபத்தில் சிக்கி மாரடைப்பில் இறந்த இந்த சம்பவம் மன்ற நிர்வாகிகள் இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.