Skip to main content

தர்பூசணியோடு விழிப்புணர்வு நோட்டீஸ் தந்த ரஜினி மன்ற மா.செ சோளிங்கர் ரவி! 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

Rajini fan sholingar Ravi issues awareness notice with watermelon

 

கோடைக்காலம் தொடக்கம் என்பது ஏப்ரல் இறுதியில் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை இருக்கும். இந்த நாட்களில் வெயில் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் கோடை கால நாட்கள் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் கடந்த பிப்வரி இறுதி முதலே தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

 

கோடைக் காலத்தை முன்னிட்டு தமிழகத்தை ஆளும்கட்சியான திமுக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுகவின் கிளைகழகத்தினர், மாநகர, நகர பகுதி, வார்டு கழக நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் குடிநீர் பந்தல் அமைக்க வேண்டும், அங்கு இளநீர், தர்பூசணி, மோர் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனச்சொல்லி தொண்டர்களை களம் இறக்கியுள்ளது. எதிர்கட்சியான அதிமுகவும் நகரப்பகுதிகளில் குடிநீர் பந்தல்களை அமைத்து மண்பானைகளில் குடிநீர் வைத்துள்ளது. 

 

மண் பானைகளில் குடிநீர் வைப்பதோடு, பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்குவது, மோர் வழங்குவதோடு, கோடைக்காலத்தில் பொதுமக்கள் எப்படியிருக்க வேண்டும் என்கிற துண்டு பிரச்சுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.ரவி.

 

Rajini fan sholingar Ravi issues awareness notice with watermelon


இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழத் துண்டுகள், நீர்மோர் வழங்கிய சோளிங்கர் ரவி, கூடவே கோடைகாலத்தில் பெரியவர்கள் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும், உணவில் தயிர், மோர் போன்றவற்றை சேர்த்துகொள்ள வேண்டும், மாம்பழம், பப்பாளி பழம் அதிகம் உண்டால் உடல் வெப்பத்தை அதிகரிக்கும், காலையில் வெந்தயம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் உடல் வெப்பத்தை குறைக்கும் போன்ற தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸையும் பொதுமக்களுக்கு தந்தார்.

 

இதுக்குறித்து நம்மிடம் பேசிய மா.செ சோளிங்கர் ரவி, “தண்ணீர், நீர்மோர், வழங்குவதோடு துண்டு பிரச்சுரம் வழங்கக்காரணம், மக்களிடம் கோடையில் இருந்து தங்கள் உடலை எப்படி காப்பது என்பது குறித்த விழிப்புணர்வில்லை. தமிழ்நாட்டில் அதிக வெப்பமாக உள்ள மாவட்டங்களில் முதன்மை இடத்தில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்றவை உள்ளன. கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் ரஜினி மன்றத்தின் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துண்டு பிரசுரம் வழங்குகிறோம். இதனை எங்கள் மன்றத்தினர், தலைவரின் ரசிகர்கள் மாவட்டம் முழுவதும் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.

 

அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்களோடு இருந்து வருகிறார்கள் என்றால் மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என இயங்குகிறார்கள். ரஜினி அரசியலுக்கு இனி வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார். ரஜினி மன்ற நிர்வாகிகள் வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு திமுக, அதிமுக, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மக்கள் அதிசயமாகப் பார்க்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.