Skip to main content

ரஜினியை கைது செய்ய வலியுறுத்தி உருவபொம்மை எரிப்பு- தேனியில் பரபரப்பு!!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை தேனியில் எரித்து போராட்டத்தில் குதித்தனர் ஆதித் தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள்.

சென்னையில் சமீபத்தில் நடந்த துக்ளக் பத்திரிக்கையின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது தந்தை பெரியார் குறித்து தெரிவித்த கருத்து  சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தேனி பூதிப்புரம் சாலையில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு ரஜினிகாந்தை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தப் போவதாக தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சேர்ந்தவர்கள் அறிவித்தனர்.

 

rajini controversy speech about peyiyar... incident in theni

 

இதனால் அந்த தியேட்டர் முன்பு போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தது. அப்பொழுது போராட்டம் நடத்துவதற்கு வந்த நிர்வாகிகளை சாலையில் கூடுவதற்கு முன்பாகவே போலீசார் பிடித்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த நிலையில் திடீரென  ஆட்டோவில் வந்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் நடிகர் ரஜினிகாந்த்தின்  உருவ பொம்மையை சாலையில் வீசி தீ வைத்து எரித்தனர்.

உடனே போலீசார் பதறியடித்துக் கொண்டு ஓடி சென்று அந்த ரஜினியின் உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் உருவ பொம்மையும் எரிந்தது. அப்பொழுது ஆதித்தமிழர் பேரவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் "தந்தை பெரியாரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என கோஷம் போட்டனர்"

 

rajini controversy speech about peyiyar... incident in theni

 

இந்த போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவா, மேற்கு மாவட்ட செயலாளர் நீலகனலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவரணி மாவட்ட செயலாளர் அருந்தமிழன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள்  அனைவரையும் அதேபகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அனைவரையும்  அங்கிருந்து வேறு திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டு மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இருந்தாலும் இப்படி திடீரென ரஜினியின் உருவ பொம்மையை எரித்தது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.