Skip to main content

ரஜினியை கைது செய்ய வலியுறுத்தி உருவபொம்மை எரிப்பு- தேனியில் பரபரப்பு!!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை தேனியில் எரித்து போராட்டத்தில் குதித்தனர் ஆதித் தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள்.

சென்னையில் சமீபத்தில் நடந்த துக்ளக் பத்திரிக்கையின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது தந்தை பெரியார் குறித்து தெரிவித்த கருத்து  சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தேனி பூதிப்புரம் சாலையில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு ரஜினிகாந்தை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தப் போவதாக தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சேர்ந்தவர்கள் அறிவித்தனர்.

 

rajini controversy speech about peyiyar... incident in theni

 

இதனால் அந்த தியேட்டர் முன்பு போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தது. அப்பொழுது போராட்டம் நடத்துவதற்கு வந்த நிர்வாகிகளை சாலையில் கூடுவதற்கு முன்பாகவே போலீசார் பிடித்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த நிலையில் திடீரென  ஆட்டோவில் வந்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் நடிகர் ரஜினிகாந்த்தின்  உருவ பொம்மையை சாலையில் வீசி தீ வைத்து எரித்தனர்.

உடனே போலீசார் பதறியடித்துக் கொண்டு ஓடி சென்று அந்த ரஜினியின் உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் உருவ பொம்மையும் எரிந்தது. அப்பொழுது ஆதித்தமிழர் பேரவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் "தந்தை பெரியாரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என கோஷம் போட்டனர்"

 

rajini controversy speech about peyiyar... incident in theni

 

இந்த போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவா, மேற்கு மாவட்ட செயலாளர் நீலகனலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவரணி மாவட்ட செயலாளர் அருந்தமிழன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள்  அனைவரையும் அதேபகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அனைவரையும்  அங்கிருந்து வேறு திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டு மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இருந்தாலும் இப்படி திடீரென ரஜினியின் உருவ பொம்மையை எரித்தது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.