Skip to main content

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆவணங்கள் ஐகோர்ட்டில் தாக்கல்

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 


உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டது தொடர்பான ஆவணங்கள்  தாக்கல் செய்யப்பட்டன. 

 

r

 

மதுரையை சேர்ந்த மகேந்திரன்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011- 2013ம் ஆண்டு வரை அமைச்சராக பதவி வகித்தபோது, பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் மீது வழக்கு பதிய லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை ஏற்கனவே நீதிமன்றத்தில் நடந்தபோது, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி விசாரணையை கைவிட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.

 

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடந்த 1996ம் ஆண்டு, திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதன் பின்னர்,  நீதிபதிகள் விசாரணை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பொதுத்துறை செயலர் தரப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன. 

 

இதையடுத்து நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஆஜர்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

kt rajendra balaji

 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். அதன்பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, கடந்த சனிக்கிழமை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது அவரிடம் 11 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது.

 

இந்நிலையில், இன்றும் விசாரணைக்காக ராஜேந்திர பாலாஜி அழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

 

 

Next Story

கே.டி.ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறியது ஏன்? - 2 தொகுதிகளை விட்டுக்கொடுத்த விருதுநகர் அ.தி.மு.க.! 

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

TN ASSEMBLY ELECTION ADMK CANDIDATES LITS KT RAJENDRA BALAJI

 

விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் விருதுநகர், திருச்சுழி ஆகிய இரண்டு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதியுள்ள 5 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட முடிவெடுத்து, கீழ்க்கண்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  

 

1.ராஜபாளையம்          - கே.டி.ராஜேந்திரபாலாஜி
2.ஸ்ரீவில்லிபுத்தூர்      - இ.எம்.மான்ராஜ்
3.சாத்தூர்                       - ஆர்.கே.ரவிச்சந்திரன்
4.சிவகாசி                      -  லட்சுமி கணேசன்  
5.அருப்புக்கோட்டை  - வைகைச்செல்வன்

 

TN ASSEMBLY ELECTION ADMK CANDIDATES LITS KT RAJENDRA BALAJI


விருதுநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் நேரடியான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த சிட்டிங் (அ.தி.மு.க) சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு இந்தத் தேர்தலில் சீட் இல்லை.  

 

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட திருச்சுழி மற்றும் விருதுநகர் தொகுதிகள், இந்தத் தடவை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 

விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க.-வுக்கென்று வாக்கு வங்கி உள்ளது. அதேபோல், தே.மு.தி.க. ஆதரவு வாக்குகளும் கணிசமாக உள்ளன. அ.தி.மு.க.வுக்கு விழவேண்டிய வாக்குகளை இவ்விரு கட்சிகளும் பிரிப்பதாலேயே, கூட்டணிக் கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளை, அ.தி.மு.க. தலைமை தாராளமாக விட்டுக்கொடுத்துள்ளது. 
 

TN ASSEMBLY ELECTION ADMK CANDIDATES LITS KT RAJENDRA BALAJI

 

கே.டி.ராஜேந்திரபாலாஜியை, கடந்த தேர்தல் வரையிலும், அ.தி.மு.க. வேட்பாளராக மட்டுமே பார்த்து வந்தது, சிவகாசி தொகுதி. முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் பார்த்த உள்ளடி வேலைகளால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சாதி அடிப்படையில் வாக்குகள் மாறி விழ, சிவகாசி யூனியன் தி.மு.க. வசமானது. சட்டமன்றத் தேர்தலிலும், இந்த உள்ளடி தொடரும் என்பதால், சிவகாசி தொகுதியை விட்டு ராஜபாளையம் தொகுதிக்கு மாறியிருக்கிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி.