Skip to main content

மத்திய அரசின் திட்டங்களை நிறுத்திய சனாதன கருத்து-திமுக அரசு மீது ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

Rajendra Balaji accuses the Sanatana opinion-DMK government of stopping the central government's projects



சிவகாசியில் அண்ணா 115-வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்கள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

 

அவர் பேசியதாவது, ''மறைந்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் சாராயக் கடைகளும் கள்ளுக் கடைகளும் திறக்கப்பட்டன. தள்ளாத வயதிலும் மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் வீட்டுக்குச் சென்று மதுக்கடைகள் வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தார். ஆனால் தொடர்ந்து மதுக் கடைகளையும் கள்ளுக்கடைகளையும் கலைஞர் திறந்துவைத்தார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் தொடங்கிய மதுக்கடைகளை இன்று வரை மூட முடியவில்லை.  அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி  ஆட்சி நடந்தபோது, இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கறுப்புச் சட்டை போட்டு கறுப்புக்கொடியைப் பிடித்து மதுக்கடைகளை மூடவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்று வரை அவர்கள் மதுக்கடைகளைப் பூட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

சொல்வதை திமுக என்றைக்கும் செய்வதே கிடையாது. திமுக ஆட்சியில் மிகப்பெரிய திட்டங்கள் ஏதாவது வந்திருக்கிறதா? அதிமுக ஆட்சியில்,  ஜெயலலிதா ஆட்சியில்,  எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைதான் திமுக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர்  அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது  ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலை இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி எல்லா மாணவர்களுக்கும் சத்துணவு திட்டம் கொண்டு வந்து உணவு அளித்து ஊக்கம் கொடுத்து படிக்க வைத்தார்.ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்  எம்ஜிஆர்.  அவர் இருக்கும் வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை.

 

ஜெயலலிதா மறைவுக்குப்  பிறகு  அதிமுக ஆட்சி கலைந்துவிடும், சட்டமன்ற உறுப்பினர்கள் சிதைந்து விடுவார்கள் என்றெல்லாம் திமுக தலைவர்கள் பேசினார்கள். எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம் நல்லாட்சி நடத்தினார்.  எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

 

மத்திய அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக கொண்டுவந்தது. ஆனால் திமுக அரசு, மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து,  திட்டங்களைத் தடுத்து வருகிறது. எந்த திட்டங்களையும் திமுக அரசால் கொண்டுவர முடியவில்லை. ஒரு கலெக்டரை எதிர்த்து செயல்பட்டால் ஒரு ஊராட்சி நிர்வாகம் செயல்பட முடியுமா?   மத்திய அரசுடன் மோதி, சனாதனத்தைப் பற்றி பேசி,  தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை தடுத்து நிறுத்திவிட்டனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் சகோதரர்களாக ஒற்றுமையாக இருந்துவரும் இந்த நாட்டில், சனாதானம் என்ற போர்வை மூலம் மத மோதலை உருவாக்குகின்ற பணியை திமுக செய்து கொண்டிருக்கிறது. இதை தடுக்கின்ற பணியை அதிமுக செய்துகொண்டிருக்கிறது.

 

சிவகாசியில் பெரியார் காலனியை இடிக்கும் தருணம் வந்தபோது ஜெயலலிதாவிடம் கூறினேன்.  ஏழை, எளிய மக்கள் என்று சொன்னேன். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞரை நியமித்து ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்துப் பார்த்தார்கள். உச்ச நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.  இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறினேன். உடனடியாக குடிசை மாற்று வாரியம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் வீடுகளை கட்டிக் கொடுக்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இதே சப் கலெக்டர் அலுவலகத்தில் வைத்துதான், அவர்களுக்கான வீட்டுச் சாவியை கொடுத்தேன். தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் பொதுமக்களை திமுக துன்புறுத்தி வருகிறது.  அப்பா  போட்டோவைக் கூட எடுக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.  பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வீடுகளை இடிக்கின்றனர்.

 

அதிமுக ஆட்சி காலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடனே வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். பட்டாசு ஆலை அதிபர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் பதிக்கப்படுகின்றனர். எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர். கூடமுடையார் அய்யனார் கோயில் ஆற்றுப்பகுதியில் மிகப் பெரிய வெள்ளம் வந்து ஏராளமானோர் இறந்துவிட்டனர். அந்தக் காலகட்டத்தில் இப்போது இருப்பதுபோல்  வாகன வசதிகள் எதுவும் கிடையாது. அன்றைய முதல்வர் எம்ஜிஆர்  உடனடியாக விமானம் மூலம் மதுரை வந்து,  கார் மூலமாக கூடமுடையார் அய்யனார் கோயில் ஆற்றுப்பகுதிக்குச் சென்றார். இதனை கேள்விப்பட்ட நான்,  அன்று  எம்.ஜி.ஆர். காரின் பின்னால் ஓடினேன். எம்ஜிஆரை பார்த்த பிறகுதான் நின்றேன். ஆற்றுப்பகுதியை பார்வையிட்ட எம்.ஜி.ஆர்., உடனடியாக பாலம் கட்ட உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கினார்.  

 

ராஜபாளையம் ரயில்வே பாலம், விருதுநகர் ரயில்வே மேம்பாலத்தை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில்தான். சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம்,  திருத்தங்கல் ரயில்வே  மேம்பாலம், இருக்கன்குடி ரயில்வே மேம்பாலம்  ஆகிய மூன்று ரயில்வே மேம்பாலங்கள் கட்ட அரசாணை போட்டு,  பணம் ஒதுக்கி விட்டுத்தான் நாங்கள் ஆட்சியைவிட்டு இறங்கினோம். இன்று வரை அந்தப் பணியை திமுக தொடங்கவில்லை.

 

சிவகாசி மாநகராட்சிக்கு அற்புதமான கட்டிடத்தை நாங்கள் கட்டிக் கொடுத்தோம். அண்ணா காலனி. எம்ஜிஆர் காலனி. இந்திரா நகரில் வசித்த பொதுமக்களுக்கு அதிமுக ஆட்சியில்தான் பட்டா வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் நடப்பதுபோல், குடியிருப்பவர்களை விரட்டியடிக்கவில்லை. குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கி வாழ்வாதாரத்தை நாங்கள் கொடுத்தோம். அண்ணா காலனியை இடிக்க முற்பட்டபோது இரவோடு இரவாக பட்டா வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது அதிமுக அரசு. இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இந்த தொகுதிக்கு செய்த வளர்ச்சி பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சிவகாசி தொகுதி அருமையான தொகுதியாக ஆக்கிய பெருமை எனக்கு உண்டு ” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.