Skip to main content

தங்கையின் நல்வாழ்வுக்காக கொலை செய்த அண்ணன்கள்!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

ddd

 

யாரோ செய்த தவறுக்குக் குடும்ப பாசத்தின் காரணமாக யார் யாரோ கொலைக் குற்றவாளிகள் ஆகின்றனர். ராஜபாளையம் சொக்கநாதன் புத்தூரிலும், அப்படி ஒரு கொலைச் சம்பவம் நடந்துள்ளது. 

 

மயில் என்பவர் மூர்த்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார். மயிலின் வாழ்க்கையில் ரவி என்பவன் குறுக்கே வந்தான். முறை தவறிய உறவு பிறந்தது. இது மயிலின் குடும்பத்துக்குப் பெரிய அவமானமாக இருந்தது. இதனால், அவரது அண்ணன் செந்தில்குமாரும் குடும்பத்தினரும் ரவியையும், மயிலையும் கடுமையாக எச்சரித்தனர். 

 

மயில் திருந்திய நிலையில், ரவி தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளான். மயில் எதிர்ப்பு தெரிவித்தும், ரவி விடவில்லை. இந்த விவகாரம், அண்ணன் செந்தில்குமாருக்குத் தெரியவர, கடை வீதியில் நின்றுகொண்டிருந்த ரவியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். 

 

சேத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமாரையும் அவரது சகோதரர் செல்வத்தையும் கைது செய்தனர். 

 

உடன் பிறந்த தங்கையின் தவறான பழக்கத்தைக் கண்டித்த விவகாரம் கொலையில் முடிந்து, அவரது சகோதரர்களை சிறையில் தள்ளியிருக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபிரிட்ஜை திறந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; மழைக்காலத்தில் ஜாக்கிரதை

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

nn

 

ஃபிரிட்ஜை திறந்த பொழுது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது வரகுணராமபுரம். இந்த பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. விடிய விடிய மின்சாரம் இல்லாத நிலையில் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கட்டிடத் தொழிலாளியான வாணி என்பவர் வழக்கம் போல காலையில் டீ வைப்பதற்காக ஃபிரிட்ஜில் இருந்து பாலை எடுக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி வாணி தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட கணவர் மாரிமுத்து பலத்த காயமடைந்த வாணியை  உடனடியாக மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வாணி வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

Next Story

‘கண்ணில் அன்பைச் சொல்வாளே…’ - இறப்பிலும் ஒன்றிணைந்த அக்கா, தம்பி!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Sister and brother passed away in Vaniyambadi

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருக்கு 104. இவரது உடன் பிறந்த தம்பி துரைசாமி. இவருக்கு 102 வயதாகிறது. இருவரும் பாசத்தோடு வளர்ந்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகளோடு வாழ்ந்து வந்தனர். வள்ளியம்மாளின் கணவர் சின்னக்கண்ணு  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 103 வயதில் இறந்துள்ளார். பின்னர் தனது இரண்டு மகன்கள், நான்கு  மகள்களுடனும் வாழ்ந்து வந்தார். 

 

இதேபோல் துரைசாமிக்கு கண்ணம்மாள் (89) என்ற மனைவியும், நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் என மகன், பேரன், கொள்ளுப்பேரன் என நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அக்கா, தம்பி இருவரும் ஒரே ஊரில் பக்கத்துப் பக்கத்து தெருவில் தத்தமது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நவம்பர் 20 ஆம் தேதி மாலை 5 மணியளவில் வள்ளியம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பக்கத்து தெருவில் இருந்த வள்ளியம்மாள் தம்பி துரைசாமி உட்பட உறவினர்களுக்கு தகவல் சொல்லியுள்ளனர். 

 

தனது அக்காவின்  இறப்பு தகவல் அறிந்த  அவரது தம்பி துரைசாமி தனது அக்கா உடல் அருகே சென்று அமர்ந்து கொண்டவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக கண்ணீரோடு அமர்ந்து இருந்துள்ளார். அடுத்த 7 மணி நேரத்தில் திடீரென துரைசாமியும் உயிரிழந்துள்ளார். இது அங்கிருந்த அனைவரின் துக்கத்தையும் அதிகரித்தது. 

 

அக்கா, தம்பி இருவரும் 100 வயதை கடந்து நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். அக்கா, தம்பி இருவரின் மரணத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் திரளாக சென்று அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் வைத்து இறுதிச் சடங்கு செய்து பின்னர் இருவரது சடலங்களையும் ஒன்றாக எடுத்துச் சென்று அருகே உள்ள மயானத்தில் இறுதி சடங்கு செய்தனர்.