Advertisment

ராஜாமணி தங்கபாண்டியன் மறைவு! -நாளை மாலை மல்லாங்கிணறு கிராமத்தில் நல்லடக்கம்!

Advertisment

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் ராஜாமணி அம்மாள், உடல் நலக்குறைவால் இன்று இரவு 8 மணிக்கு காலமானார். நாளை மாலை அவரது உடல், அவரது சொந்த கிராமமான விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயாருமான .ராஜாமணி தங்கபாண்டியன் (வயது 84) இன்று (4-10-20) இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஒருமாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று அவரது சொந்த கிராமமான மல்லாங்கிணறு வந்தார். இன்று இரவு 8 மணிக்கு காலமானார். நாளை (5-10-2020) பிற்பகல் 3 மணிக்கு, தங்கம் தென்னரசுவின் இல்லத்தில் இருந்து துவங்கும் ராஜாமணி அம்மாளின் இறுதி ஊர்வலம், நகரின் வீதி வழியாக, தங்கப்பாண்டியனின் சமாதியை அடைந்து, 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Advertisment

தகவலறிந்த திமுகவினர் மற்றும் அந்த கிராமத்து பொதுமக்கள், தங்கம் தென்னரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் ராஜாமணி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

passed away viruthunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe