Rajagopuram works in full swing at Samayapura temple

Advertisment

திருச்சி சமயபுரம் கோவிலின் கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தற்போது கோவிலில் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் கோபுரங்கள் அமைக்கும் பணி முடிவடைந்தது.

தற்போது சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணியானது முழு மூச்சாக நடைபெற்றுவருகிறது. மேலும், சமயபுரம் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டமானது வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் கோவிலுக்கு வந்து முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.