Skip to main content

ஓய்வூதிய வயதை உயர்த்தியது நிதிப் பற்றாக்குறையைத் தான் காட்டுகிறது! த.ப.ஆ.கூ. பொதுச்செயலாளர் பேட்டி!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

tamil nadu


தமிழக அரசு ஓய்வூதிய வயதை உயர்த்தியது என்பது அரசின் நிர்வாகக் குளறுபடியையும் நிதிப் பற்றாக்குறையையும் தான் காண்பிக்கிறது என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
 

திண்டுக்கலுக்கு வருகை தந்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்டரி டைமண்ட் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,
 

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய வயதினை 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் இன்றைக்கு இந்த ஆண்டு ஓய்வு பெறக்கூடியவர்களுக்கு அது பலன் அளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் ஒரு நீண்டகால பயணத்திலே ஆசிரியர்கள், அரசு ஊழியர் இயக்கங்கள் எதுவும் எழுப்பாத இந்தக் கோரிக்கையை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டு இருக்கிறது.
 

கடந்த 15 நாட்களுக்குள்ளாக நிதி நெருக்கடியின் காரணமாக அகவிலைப்படி உயர்வு ரத்து ஈட்டிய விடுப்பு காக்கக்கூடிய உரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது. இவர்களுடைய ஜிபிஎப் வட்டித் தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லக்கூடிய அரசு ஓர் ஆண்டிற்கான ஓய்வு பெறும் வயதை அதிகரித்திருப்பது அரசினுடைய நிர்வாகக் குளறுபடிகள், அரசினுடைய நீதி நெருக்கடியைக்  காண்பிக்கிறது.

 

 

படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி லட்சக்கணக்கான மாணவர்கள் அரசுப் பணிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

அரசாணை எண் 56 என்ற ஒரு அரசாணை வெளியிட்டு கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளைக் குறைப்பதற்கான குழுவினை அரசு அமைத்து அதன்படி அரசு பணி இடங்களைக் குறைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு நன்மை பயப்பதாக அமையாது.
 

தமிழக அரசு, ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மேல் நலனோடு செயல்படக் கூடியதாக இருந்தால் அவர்களுக்குப் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதும் பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதுமே உண்மையான பலனாக அமையும். மற்றபடி 59 ஆண்டுகள் என்பது மத்திய அரசு பணிகளில் 60 ஆண்டுகளாக உள்ளது. 58 ஆண்டுகளாக இல்லாமலும் 60 ஆண்டுகளாக இல்லாமலும் ஒரு அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
 

இந்த ஆண்டு அதிக அளவில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளார்கள். அரசு எடுத்த முடிவாகத்தான் நினைப்பர். அவர்களுக்கான நிதி பங்களிப்பினை வழங்க முடியாமல் அரசு எடுத்த முடிவாகத்தான் இதனை நாங்கள் பார்க்கின்றோம். இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும். தமிழகத்தில் நிலைமை சீரான பிறகு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.