Skip to main content

ஓய்வூதிய வயதை உயர்த்தியது நிதிப் பற்றாக்குறையைத் தான் காட்டுகிறது! த.ப.ஆ.கூ. பொதுச்செயலாளர் பேட்டி!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

tamil nadu


தமிழக அரசு ஓய்வூதிய வயதை உயர்த்தியது என்பது அரசின் நிர்வாகக் குளறுபடியையும் நிதிப் பற்றாக்குறையையும் தான் காண்பிக்கிறது என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
 

திண்டுக்கலுக்கு வருகை தந்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்டரி டைமண்ட் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,
 

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய வயதினை 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் இன்றைக்கு இந்த ஆண்டு ஓய்வு பெறக்கூடியவர்களுக்கு அது பலன் அளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் ஒரு நீண்டகால பயணத்திலே ஆசிரியர்கள், அரசு ஊழியர் இயக்கங்கள் எதுவும் எழுப்பாத இந்தக் கோரிக்கையை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டு இருக்கிறது.
 

கடந்த 15 நாட்களுக்குள்ளாக நிதி நெருக்கடியின் காரணமாக அகவிலைப்படி உயர்வு ரத்து ஈட்டிய விடுப்பு காக்கக்கூடிய உரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது. இவர்களுடைய ஜிபிஎப் வட்டித் தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லக்கூடிய அரசு ஓர் ஆண்டிற்கான ஓய்வு பெறும் வயதை அதிகரித்திருப்பது அரசினுடைய நிர்வாகக் குளறுபடிகள், அரசினுடைய நீதி நெருக்கடியைக்  காண்பிக்கிறது.

 

 

படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி லட்சக்கணக்கான மாணவர்கள் அரசுப் பணிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

அரசாணை எண் 56 என்ற ஒரு அரசாணை வெளியிட்டு கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளைக் குறைப்பதற்கான குழுவினை அரசு அமைத்து அதன்படி அரசு பணி இடங்களைக் குறைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு நன்மை பயப்பதாக அமையாது.
 

தமிழக அரசு, ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மேல் நலனோடு செயல்படக் கூடியதாக இருந்தால் அவர்களுக்குப் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதும் பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதுமே உண்மையான பலனாக அமையும். மற்றபடி 59 ஆண்டுகள் என்பது மத்திய அரசு பணிகளில் 60 ஆண்டுகளாக உள்ளது. 58 ஆண்டுகளாக இல்லாமலும் 60 ஆண்டுகளாக இல்லாமலும் ஒரு அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
 

இந்த ஆண்டு அதிக அளவில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளார்கள். அரசு எடுத்த முடிவாகத்தான் நினைப்பர். அவர்களுக்கான நிதி பங்களிப்பினை வழங்க முடியாமல் அரசு எடுத்த முடிவாகத்தான் இதனை நாங்கள் பார்க்கின்றோம். இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும். தமிழகத்தில் நிலைமை சீரான பிறகு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
1749 nominations filed in Tamil Nadu
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் -  36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் -  56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. 

Next Story

தமிழச்சி vs தமிழிசை; அனல் பறக்கும் தென்சென்னை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Tamil Nadu BJP Announcement of Candidates

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இதனையொட்டி தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் முடிவுற்றுள்ளன. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் அடங்கிய 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) வெளியிட்டது.

இந்நிலையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி -  பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர்  ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.  

முன்னதாக தென்சென்னை தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டிருந்தார். பாஜகவின் இந்த அறிவிப்பின் மூலம் தென்சென்னை தொகுதி தமிழச்சி vs தமிழிசை என அனல் பறக்க தொடங்கியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தனது பதவியை ராஜினாமா செய்து அண்மையில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.