Skip to main content

மழைக் காலங்களில் மின்சாரம் தடைபட்டால் 2, 3 நாட்கள் மின்சாரம் வருவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Published on 12/07/2020 | Edited on 12/07/2020

 

மழைக்காலங்களில் மின்சாரம் தடைப்பட்டால் இரண்டு, மூன்று நாட்கள் மின்சாரம் வருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ள தமிழக அரசு ஊழியர்களையும் கூடுதலாக நியமித்து மின் பராமரிப்பை செய்யாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

 

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கம்பம் ஏறி களப்பணி ஆற்றுபவர்கள் குறைவாகவே உள்ளனர். இதனால் மக்களின் தேவைக்கு ஏற்ப்ப பணியாற்ற முடியவில்லை. 


மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ள தமிழக அரசு ஊழியர்களையும் கூடுதலாக நியமித்து போதுமான மின் உபகரண பொட்களையும் வழங்கி மின் பராமரிப்பை செய்யாதது ஏன்?

 

செந்துறை ஒன்றியத்தில் செந்துறை, ஆர். எஸ். மாத்தூர் பகுதிகளில் கிராமப்புறங்களில் மழைக் காலங்களில் மின்சாரம் தடைபட்டால் 2,3நாட்கள் மின்சாரம் வருவதில்லை. குடிநீர் பிரச்சனை ஏற்ப்படுகிறது. சரி செய்வதற்கும் போதுமான ஆட்கள் மின்சார வாரியத்தில் இல்லை. 

 

அதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 97 மின் மாற்றிகள் (Transformer) உள்ளது. இவற்றை பராமறிக்கவும்,பழுது பார்த்துகொள்ளவும் 15 லயன்மேன், உயர்மேன், என களப்ணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் 5 பேர் மட்டுமே பணியாற்றும் அவல நிலை உள்ளது. இவர்களால் மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பு பணியை செய்ய முடியும்?. 

 

30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்வட கம்பிகள் அடிக்கடி அறுந்து விழும் நிலையில் உள்ளது. இதில் மின்சாரம் செல்லும் போது சரியாக எர்த் கிடைக்காததால் ரிட்டன் ஆகிறது (Rettan Saplai). மேலும் சராசரியை விட கூடுதல் மின் அழுத்தம் ஏற்ப்படுவதால் வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருள்கள் பழுது படுகிறது. இந்த அவலநிலையை போக்க கூடுதலாக ஊழியர்களை நியமித்து பழைய கம்பிகளை மாற்றி சீரான மின்சாரம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என செந்துறை ஒன்றிய திமுக(வ) திமுக செயலாளர் மு.ஞானமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் வெப்பம்; செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

Published on 22/04/2024 | Edited on 23/04/2024
What to do? What not to do? on increasing heat in summer season

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

இதனிடையே, வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால்  மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், குழுந்தைகள் மற்றும் கால்நடைகளை வெளியே அழைத்து வருவதை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர். இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பின்வருமாறு காண்போம்.

வெப்பத்தைத் தனித்துக்கொள்ள தாகம் எடுக்கவில்லை என்றாலும், பொது மக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பத்தால் மயக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார குழுவினர் கூறுகின்றனர். ஒருவேளை அவசர வேளையாக வெளியே செல்ல நேரிட்டால், வெளியே செல்லும் போது கட்டாயம் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதே வேளையில், பாட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது போன்றவற்றை தவிர்த்துவிட்டு மோர், எலுமிச்சை, தண்ணீர் போன்ற வீட்டில் செய்யக்கூடிய பானங்களைக் குடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனையடுத்து, நண்பகலில் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வெளியே வேலை பார்ப்பவராக இருந்தால் குடையோ அல்லது தொப்பியோ இல்லாமல் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப அலை தாக்கத்தின் போது, புரதச் சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல் சோர்வுற்றாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் எனச் சுகாதார துறையினர் கூறுகின்றனர். மேலும், வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை வெளியே கட்டி போடாமல் நிழலில் கட்டி வைக்க வேண்டும்.

அந்தப் பிராணிகளுக்கும் அதிக தண்ணீரை கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், வீட்டை அடிக்கடி தண்ணீர் மூலம் சுத்தம் செய்து குளிர்ச்சியாக வைக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொது மக்கள் மேற்கொண்டால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.