Skip to main content

அச்சிறுப்பாக்கத்தை சூழ்ந்த மழைநீர்; மருத்துவமனைக்குள் நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Rainwater surrounds the hospital; patients suffer as water seeps into the hospital

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மேட்டுகாலனி அருகே நீர்நிலைகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்தது. மாமல்லபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்தது. இந்நிலையில், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுகாலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. ஏற்கனவே 'மிக்ஜாம்' புயல் காரணமாக அந்த பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் மற்றும் இன்று மதியம் கனமழை பொழிந்தால் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். அதேபோல் அந்த பகுதியில் சாலை ஓரத்திலும் நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து சேவையிலும் சற்று பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்துதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் 108 அம்புலன்ஸ் மூலம் மதுராந்தகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கட்டடம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. நோயாளிகளின் படுக்கை அறை வரை தண்ணீர் உள்ளதால் நோயாளிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.