தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாகத்தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

Advertisment

முதல்வர், அமைச்சர்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இரண்டாவது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதி முழுவதும் தொடர் மழை காரணமாக மழைநீர் சூழ்ந்துள்ளது. அதே போல் பல்லாவரம் தரைப்பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது.

Advertisment